Latest News
Home / இலங்கை / நாட்டில் தற்போதைய எரிபொருள் இருப்பு…!

நாட்டில் தற்போதைய எரிபொருள் இருப்பு…!

இலங்கையில் போதிய எரிபொருள் இருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (17) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது எரிபொருள் விநியோகம் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், களஞ்சியசாலைகளிலும் போதுமான எரிபொருள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை. எனவே வீணாக குழப்பமடைந்து எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட வேண்டாம்.

நாட்டுக்குத் தேவையான எரிபொருள் தற்போது எமது கிடங்குகளில் உள்ளது என்பதை நான் மிகவும் பொறுப்புடன் கூறுகின்றேன்.

மேலும், நான் பேசும் இந்த தருணத்தில் கூட 40,000 மெற்றிக் தொன் டீசல் எமது முத்துராஜவெலயில் இறக்கப்படுகிறது.

மேலும் நாளை 36,000 மெட்ரிக் தொன் பெற்றோலை இறக்குமதி செய்யவுள்ளோம்.

எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் 40,000 மெற்றிக் தொன் டீசல் இறக்குமதி செய்யப்படவுள்ளது.

அதன்படி எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *