வி.சுகிர்தகுமார்
திருக்கோவில் பிரதேசத்தில் பல வருடங்களின் பின்னர் தமிழ் வேதபாராயண முற்றோதல் என சொல்லப்படும் பன்னிரு திருமுறை ஓதல் ஆலயங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக தம்பிலுவில் குரு குலத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கண இராஜரெத்தினம் அவர்களின் ஒருங்கிணைப்பில் தம்பிலுவில் முனையூர் படபத்திரகாளியம்மன் ஆலயத்தில் கடந்த 06 ஆம் திகதி முதல் பன்னிரு திருமுறைகள் ஓதல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
ஆலயத்தின் தலைவர் உள்ளிட்ட நிருவாகத்தின் ஒத்துழைப்போடு இடம்பெற்றுவரும் பன்னிரு திருமுறை ஓதலில் முப்பதிற்கும் மேற்பட்ட ஓதுவார்கள் கலந்து கொண்டுள்ளனர்.
திருமுறைகளில் மொத்தம் 12 திருமுறைகள் உள்ளதுடன் 18280 பாடல்களையும் கொண்டுள்ளது.
இத்திருமுறைகள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் திருமுறைகள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நாட்டினதும் கிராமத்தினதும் மக்களதும் நன்மை வேண்டியும் கொரோனா அச்சத்தில் இருந்து மக்கள் மீட்சி பெறவும் வேண்டி திருக்கோவில் பிரதேத்தில் சுகாதார நடைமுறைகளும் திருமுறைகள் ஓதப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.