திருக்கோவில் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிவன் அருள் பௌண்டேனின் இணை நிதி அனுசரனையில் இடம்பெற்று வந்த அழகு கலை பயிற்சி நெறியினை நிறைவு செய்த யுவதிகளுக்கான 2022ஆண்டுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு.த.கஜேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது
இந் நிகழ்வில் 2022 ஆண்டிற்கான அழகுக்கலை பயிற்சி நிறைவு செய்த யுவதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் உதவி பிரதேச செயலாளர் திரு.க.சதிசேகரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் M.அனோஜாஆகியோருடன் சமூக செயற்பாட்டாளர் திரு.V.வாமதேவன் சிவன் அருள் பௌடேசணின் தலைவரும் தென்கிழக்கு பழ்கலைக்கழக விரிவுரையாளரும் சமூக செயற்பாட்டாளருமான செல்வி.N.அனுசியா மற்றும் பிரதேச செயலக இளைஞர் சேவை உத்தியோகத்தர் திரு.Y.பிரபாகரன் மற்றும் அழகுக் கலை ஆசிரியர் திருமதி சுபாஜினி பிரபாகரன் மற்றும் பயிற்சி பெற்ற யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஜேகே.யதுர்ஷன்