அம்பாரை மாவட்டத்தில் இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன கடந்த (27) காலை 9.30 மணியளவில் பாடசாலையின் சிரேஸ்ர ஆசிரியர்.A.L. பத்திமா சிபா ஆசிரியர் தலைமையில்
இடம்பெற்றது.
திருக்கோவில் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் அதிகஸ்ர, தொழில் வாய்ப்பற்று வாழும் குடும்ப மாணவர்கள் கல்வி கற்கும் கமு/திகோ/திராய்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் (40) மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
இம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன பாடசாலையின் ஆசிரியர்களான கே. விஜிதரன், திருமதி. ந. பவாணிஆகியோரும் இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான திரு.லோ.கஜரூபன், திரு. காந்தன், திரு.சி.துலக்சன், லிரோஸ்காந், ஜெயந்தன், சிருஸ்காந், தஜன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.