திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை ஷீரடி என உலக வாழ் மக்களால் அழைக்கப்பட்டுவரும் அம்பாறை திருக்கோவில் தாமரைக்குளம் ஷீரடி சாயி கருணால ஸ்தாபகர் Seetha Vivek அவர்களின் நிதி அனுசரனையில் திருக்கோவில் 04 காயத்திரி கிராமத்தில் கடந்த தினங்களில் பெய்த அடைமழையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தில் பாதிக்கப்பட்டு வாழ் வாதாரத்தை இழந்த 50 வறிய குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது….
இன் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் மற்றும் திருக்கோவில் பிரதேச கிராம சேவையாளர்களுக்கான நிறுவாக உத்தியோத்தர் திரு. கந்தசாமி திருக்கோவில் 4 காயத்திரி கிராம கிராமசேவையாளர் திரு.சடாச்சரன் மற்றும் தாமரைக்குளம் ஷீரடி சாயி கருணாலய சார்பில் ஜே.கே.யதுர்ஷன் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.