வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்டத்தின் தம்பட்டை கிராமத்தில் வேட்பாளர் இ.சுவர்ணராஜின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் அம்பாரை மாவட்டத்தில் இரு காரணங்களுக்காகவே நான் போட்டியிடுகின்றேன். ஒன்று நமது நிலமீட்புடன் இருப்பை தக்கவைத்தல். இரண்டாவது அபிவிருத்தி. இதற்காகவே களமிறங்கினேன்.
இதேநேரம் சில நாட்களுக்கு முன்னர் எந்த ஊடகத்தை பார்த்தாலும் கருணா அம்மானை பற்றியே பேசியது. இத்தோடு முடிந்தது கருணா அம்மானின் சரித்திரம் என்றனர் சில அரசியல்வாதிகள். ஆனாலும் அடுத்த நிமிடமே நான் திரும்பி வந்தேன். கருணா அம்மானை விமர்சிப்பதற்கு யாருக்கும் முடியாது என்றார் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ. இறுதியில் ஒன்றுமில்லாமல் போனது. அரசுடன் நாம்
எவ்வாறு இருக்கின்றோம் என்பது இதில் புரிந்திருக்கும் என்றார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சிதறிவிட்டது. அம்பாரை மாவட்டத்தில் உள்ள அவர்களது 10 வேட்பாளர்களை கூட ஒரு நாளேனும் ஒன்றாக காண முடியாத நிலை உருவாகியுள்ளது. ஒவ்வொருவரும் தனியாக வெல்ல வேண்டும் என ஓடித்திரிகின்றனர். அந்த வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தோற்பது உறுதி. ஆகவே வாக்கை பிரிக்காமல் கோடீஸ்வரன் உள்ளிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள் என்னுடன் வந்து இணைந்துகொள்ளுங்கள் எனவும் பகிரங்கமாக அழைப்பு விடுப்பதாக கூறினார். அவ்வாறு செய்தார்கள் என்றால் மாத்திரமே அவர்கள் தமிழன் எனவும் சுட்டிக்காட்டினார்.
இன்னும் தேர்தல் களத்தில் குதிக்காத நான் அம்பாரை மாவட்டத்தில் முதல் முதலாக களமிறங்கி முதல் தடவையாக மக்களிடம் வாக்கு கேட்கின்றேன். அம்பாரையில் புரட்சியை ஏற்படுத்த புறப்பட்டுள்ளேன். இந்த புரட்சியானது கிழக்கில் ஒரு தமிழ் முதலமைச்சரை உருவாக்கும் என்றார்.