Latest News
Home / இலங்கை / தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தோற்பது உறுதி! தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள் என்னுடன் வந்து இணைந்துகொள்ளுங்கள்- தம்பட்டை கிராமத்தில் கருணா அம்மான்  பகிரங்கமாக அழைப்பு!!!

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தோற்பது உறுதி! தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள் என்னுடன் வந்து இணைந்துகொள்ளுங்கள்- தம்பட்டை கிராமத்தில் கருணா அம்மான்  பகிரங்கமாக அழைப்பு!!!

வி.சுகிர்தகுமார்

 தனியொரு கப்டனாக கப்பலை தள்ளிவந்தேன். ஆனால் சங்கர் எனும் இன்னுமொரு கப்டனும் கப்பலை தள்ளுவதற்காக என்னுடன்  இணைந்துள்ளார். அவரும் எனக்கு சமமான ஒருவரே. சமகாலத்தில் போரட்டத்திற்கு சென்று என்னைப்போல் தளபதியாக இருந்தவர். என்னைப்போல் இரு தடவை பாராளுமன்றத்திற்கு சென்றவர் என ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாரை மாவட்ட வேட்பாளரும் முன்னை நாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் தெரிவித்தார்.

அம்பாரை மாவட்டத்தின் தம்பட்டை கிராமத்தில் வேட்பாளர் இ.சுவர்ணராஜின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் அம்பாரை மாவட்டத்தில் இரு காரணங்களுக்காகவே நான் போட்டியிடுகின்றேன். ஒன்று நமது நிலமீட்புடன் இருப்பை தக்கவைத்தல். இரண்டாவது அபிவிருத்தி. இதற்காகவே களமிறங்கினேன்.

இதேநேரம் சில நாட்களுக்கு முன்னர் எந்த ஊடகத்தை பார்த்தாலும் கருணா அம்மானை பற்றியே பேசியது. இத்தோடு முடிந்தது கருணா அம்மானின் சரித்திரம் என்றனர் சில அரசியல்வாதிகள். ஆனாலும் அடுத்த நிமிடமே நான் திரும்பி வந்தேன். கருணா அம்மானை விமர்சிப்பதற்கு யாருக்கும் முடியாது என்றார் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ. இறுதியில் ஒன்றுமில்லாமல் போனது. அரசுடன் நாம்
எவ்வாறு இருக்கின்றோம் என்பது இதில் புரிந்திருக்கும் என்றார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சிதறிவிட்டது. அம்பாரை மாவட்டத்தில் உள்ள அவர்களது 10 வேட்பாளர்களை கூட ஒரு நாளேனும் ஒன்றாக காண முடியாத நிலை உருவாகியுள்ளது. ஒவ்வொருவரும் தனியாக வெல்ல வேண்டும் என ஓடித்திரிகின்றனர். அந்த வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தோற்பது உறுதி. ஆகவே வாக்கை பிரிக்காமல் கோடீஸ்வரன் உள்ளிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள் என்னுடன் வந்து இணைந்துகொள்ளுங்கள்  எனவும் பகிரங்கமாக அழைப்பு விடுப்பதாக கூறினார். அவ்வாறு செய்தார்கள் என்றால் மாத்திரமே அவர்கள்  தமிழன் எனவும் சுட்டிக்காட்டினார்.

இன்னும் தேர்தல் களத்தில் குதிக்காத நான் அம்பாரை மாவட்டத்தில் முதல் முதலாக களமிறங்கி முதல் தடவையாக மக்களிடம் வாக்கு கேட்கின்றேன். அம்பாரையில் புரட்சியை ஏற்படுத்த புறப்பட்டுள்ளேன். இந்த புரட்சியானது கிழக்கில் ஒரு தமிழ் முதலமைச்சரை உருவாக்கும் என்றார்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *