ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படும் சிறுநீரக வைத்தியசாலை, சீன ஜனாதிபதியிடம் இருந்து தனக்கு கிடைத்த பரிசு எனவும் அந்த வைத்தியசாலையில் தொழில் வாய்ப்புகளை வழங்க எவருக்கும் இடமளிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை வெலிக்கந்தை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது முன்னாள் ஜனாதிபதி
சீன ஜனாதிபதி எனக்கு வழங்கிய பரிசு பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை. அந்த வைத்தியசாலையில் தொழில் வாய்ப்புகளை வழங்க விண்ணப்பங்களை வழங்கியுள்ளதாக கேள்விப்பட்டேன். சிறுநீரக வைத்தியசாலை நான் கொண்டு வந்தது. நான் நிர்மாணித்தது. எனக்கு கிடைத்த பரிசு. அதில் எவரும் முட்டையிட அனுமதிக்க மாட்டேன்.
நானே அந்த வைத்தியசாலையின் பணிகளை மேற்கொள்வேன். முட்டையிட முடியாதவர்கள் வேறு நபர்கள் கட்டிய கூட்டில் முட்டையிட சில முயற்சித்து வருகின்றனர். அது வேறு கதை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.