Latest News
Home / இலங்கை / சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா தொற்று: 90 இலட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை!

சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா தொற்று: 90 இலட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை!

சீனாவில் நான்ஜிங் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று, தற்போது ஐந்து மாகாணங்களுக்கும் தலைநகர் பெய்ஜிங் நகருக்கும் பரவ தொடங்கியுள்ளது.

ரஷ்யாவிலிருந்து நான்ஜிங் நகருக்கு ஜூலை 10ஆம் திகதியன்று வந்த விமானத்தில் பணிபுரிந்த துப்பறவு பணியாளருக்கு தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதன்முதலில் நகரின் கூட்ட நெரிசல் மிகுந்த விமான நிலையத்தில் ஜூலை 20ஆம் திகதியன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அப்போதிலிருந்து இதுவரை 200பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நான்ஜிங் நகரிலிருந்து வரும் விமானங்கள் அனைத்தும் ஒகஸ்ட் 11ஆம் திகதி வரை நிறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் நகர் முழுவதும் வசிக்கும் சுமார் 90 இலட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளும் முயற்சியை அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர்.

சீன தலைநகர் பெய்ஜிங் உட்பட வைரஸ் தொற்று பரவல் 13 நகரங்களுக்கு பரவியுள்ளதாக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இந்த தொற்று பரவல் இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது என்றும் கட்டுப்படுத்தக் கூடியதுதான் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேரின் நிலை மோசமாக உள்ளதாக நான்ஜிங்கில் உள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த தொற்றுக்கு காரணம், தீவிர பரவல் தன்மை கொண்ட டெல்டா திரிபுதான் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் விமான நிலையம் எப்போதும் ஆட்கள் வந்து செல்லும் இடம் என்பதால் தொற்று பரவியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் டெல்டா திரிபுக்கு எதிராக தடுப்பு மருந்து வேலை செய்கிறதா என சில சீன சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.

 

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *