திருக்கோவில் பொலிஸ் பிரிற்க்குட்பட்ட சாகாமம் பகுதியில் இன்று (01) அதிகாலை 67வயது மதிக்கத்தக்க ஒருவர் காட்டு யானைத்தாக்குதலுக்கு பலியாகியுள்ளார்.
பலியானவர் தம்பிலுவில் 02 பிரதான வீதியை வசிப்பிடமாக கொண்ட கனகரெட்ணம் கங்காதரன்(AI) என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறிந்த நபர் திருக்கோவில் சாகாமம் பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில் காவலுக்கு நின்ற போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் பற்றிய மேலதிக விசாரனையை திருக்கோவில் பொலிஸ்சார் மேற்கொண்டு வருகின்றனர்.
-ஜே.கே.யதுர்சன்-