Latest News
Home / இலங்கை / கோழி இறைச்சிவிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

கோழி இறைச்சிவிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எதிர்வரும் காலங்களில் எந்தவிதத்திலும் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்படாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

அத்துடன், கோழி இறைச்சியின் விலையை அதிகரிப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

சந்தையில் தோலுடனான கோழி இறைச்சி ஒரு கிலோகிராமின் விலை 430 ரூபா என அவர் குறிப்பிட்டார்.

அதே கோழி இறைச்சி சதொசவில் 400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது பொருட்களின் விலை கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யப்படுமாக இருந்தால், 1998 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு அறிவிக்குமாறும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *