Latest News
Home / இலங்கை / கோரக்கர் நண்பர்கள் நலன்புரிச் சங்கத்தினால் தைப்பொங்கலுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைப்பு…

கோரக்கர் நண்பர்கள் நலன்புரிச் சங்கத்தினால் தைப்பொங்கலுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைப்பு…

அம்பாறை மாவட்டத்தின் பழவெளி மற்றும் பழைய வளத்தாப்பிட்டி கிராமங்களில் உள்ள பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த விதவைகள் குடும்பங்களுக்கு தைப்பொங்கலுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்வு பழவெளி சிவன் ஆலயத்தில் வெ. மோகன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கோரக்கர் நண்பர்கள் நலன்புரிச் சங்கத்தலைவரும் அதிபருமான சோ.இளங்கோவன் அவர்களும், பிரதேச ஆலய ஒன்றியச் செயலாளர் து. காந்தன் அவர்களும், சிறி கோரக்கோவில் மாரியம்மன் கோவில் செயலாளர் அழகுராஜன் அவர்களும், இளைஞர் கழக தலைவர் லுசாந் அவர்களும், இளம் விஞ்ஞானி சோ. வினோஜ்குமார் அவர்களும் கலந்து கொண்டு தைப் பொங்கலுக்கான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வைத்தனர்.

இதற்கான நிதி அனுசரனையினை சிவனருள் அறக்கட்டளையின் தலைவர் டொக்டர் ஜெயமோகன் அவர்கள் வழங்கி வைத்தார். சம்மாந்துறை கோரக்கர் நண்பர்கள் நலன்புரிச் சங்கத்தினால் பல சமூக, சமய மற்றும் கல்விக்கான சேவைகள் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *