Latest News
Home / இலங்கை / கொரோனா தொடர்பான தற்போதைய நிலவரம்

கொரோனா தொடர்பான தற்போதைய நிலவரம்

நேற்றைய தினம் இலங்கையில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 826 என்பதுடன், இவர்களுள் 212 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என Covid-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டுத் மையம் தெரிவித்துள்ளது.

இவர்களில் கம்பஹா மாவட்டத்தில் 132 பேரும், கண்டி மாவட்டத்தில் 131 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 78 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 62 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 37 பேரும், காலி மாவட்டத்தில் 29 பேர் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 28 பேரும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் 20 பேரும், பதுளை மாவட்டத்தில் 15 பேரும், கேகாலை மாவட்டத்தில் 14 பேரும், அனுராதபுர மாவட்டத்தில் 14 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 10 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 6 பேர் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 6 ஆறு பேரும் நேற்றையதினம் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், அம்பாறை மாவட்டத்தில் 4 பேரும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 4 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 4 பேரும், வவுனியா மாவட்டத்தில் 3 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 3 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 2 பேர் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 பேரும் நேற்றைய தினம் தொற்றுக்குள்ளானவர்களுள் அடங்குவர். ஏனைய 10 பேரும் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களாவர்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *