Deprecated: Optional parameter $depth declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326

Deprecated: Optional parameter $args declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்கு காணி, நிதி அதிகாரத்தினை இடைநிறுத்தி இருப்பது நல்ல செயல் அல்ல-சிவஞானம் சிறிதரன் – Website of Alayadivembu
Latest News
Home / இலங்கை / கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்கு காணி, நிதி அதிகாரத்தினை இடைநிறுத்தி இருப்பது நல்ல செயல் அல்ல-சிவஞானம் சிறிதரன்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்கு காணி, நிதி அதிகாரத்தினை இடைநிறுத்தி இருப்பது நல்ல செயல் அல்ல-சிவஞானம் சிறிதரன்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்கு காணி, நிதி அதிகாரத்தினை இடைநிறுத்தி இருப்பது நல்ல செயல் அல்ல என சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார் .

இன்று நண்பகல் வேளை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவராசா கலையரசன் , சிவஞானம் சிறிதரன் , காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணப்பிள்ளை ஜெயசிறில் ஆகியோர் செயலக விடையம் தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் இந்த கருத்தினை தெரிவித்தார்.

மேலும் குறிப்பிடுகையில்…

கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்திற்குரிய கணக்காளரை நியமிக்காமை மற்றும் காணிகள் அதிகாரமற்ற நிலையில் அந்தப் பிரதேசம் இயங்குகின்ற விடயங்கள் தொடர்பில் தகவல்களைத் திரட்டிக் கொண்டு அங்கிருந்தவர்களுடன் உரையாடி பிரதேச செயலகத்தினையும பார்வையிட்டுள்ளோம்.

இந்தப் பிரதேச செயலகம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 30 வருடங்களைத் தாண்டியும் பிரதேச செயலகத்தினுடைய நடவடிக்கைகள் நடைபெறுகின்ற போதும் ஒரு கணக்காளரை நியமிக்காமல், நியமித்தும் அதனை நிறுத்தியும் நடவடிக்கைகளை அரசங்கம் மேற்கொண்டிருப்பது ஒரு நல்ல செயலல்ல.

அதேபோல் தன்னுடைய பிரதேச செயலக எல்லைக்குள் காணி அதிகாரமானதும் அப்பிரதேச செயலகத்திற்கு வழங்கப்படாமல் இருக்கின்றதே தவிர மற்றைய அனைத்து நடவடிக்கைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

நாங்கள் தொடர்ந்து இந்தப் பிரதேச செயலகத்தற்குரிய காணி நிதி அதிகாரங்களை உரிய தரப்புகளோடு பேசி மிக விரைவாக அவற்றை இப்பிரதேச செயலகத்திற்குப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அதனை இன்னும் மிக வேகப்படுத்தி செயற்படுத்துவோம் என தெரிவித்தார்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *