கல்முனை ஸாஹிறா கல்லூரியின் தரம்-10 மாணவர்கள் வீட்டில் இருந்தவாறு தமது கல்வி நடவடிக்கைகளை தொடரும் நோக்கில் E-LEARNING G10 ZCK எனும் Whats App roup ஒன்று ஆரம்பிக்கப்பட்டு கற்றல் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதுவரை இக்குழுவில் இணைந்து கொள்ளாத தரம்-10 மாணவர்கள் தங்களது பெயர், வகுப்பு, Whats App இலக்கம் என்பவற்றை பகுதித் தலைவர் ஏ.எச்.எம்.றிஸான் அவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கல்லூரியின் அதிபர் எம்.ஐ.ஜாபீர் வேண்டிக் கொள்கின்றார்.
குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் இதற்கான ஒழுங்குகளை செய்து கொடுத்து, வழிநடாத்துமாறும் அதிபர் வேண்டுகோள் விடுகின்றார்.