Latest News
Home / ஆலையடிவேம்பு / கண்ணகி கிராம மக்கள் குடிநீர் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கிவைப்பு…..

கண்ணகி கிராம மக்கள் குடிநீர் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கிவைப்பு…..

அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காடு, மகாசக்திபுரம் , புளியம்பத்தை, கவாடாப்பிட்டி, கண்ணகிபுரம் ஆகிய பிரதேச மக்களுக்கு பனங்காடு பாலத்தினை கடந்து குடிநீரினை கொண்டு செல்வதற்கு நீர் வழங்கல் அமைச்சின் கீழ் 90 மில்லியன் முதற்கட்ட வேலைக்காக ஒதுக்கப்பட்டு கடந்த 04.03.2021 அன்று ஆரம்ப நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இருந்த போதிலும் நிதி நெருக்கடிகள் காரணமாக குறித்த வேலைத்திட்டம் மந்தகதியில் நடைபெற்று வருவதுடன் பலரினதும் முயற்சியால் பகுதியளவிலான வேலைகள் முடிவுபெற்றுக்கொண்டு வருகிறது.

அந்த வகையில் இன்றைய தினம் (27.09.203) புதன்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகி கிராம மக்கள் குடிநீர் இணைப்பை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் உத்தியோக பூர்வமாக வழங்கும் நிகழ்வு கண்ணகி கிராம சன சமூக நிலைய தலைவர் K.கோகுலன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறியியலாளர்கள் விநோதன், மயூரன் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் பிரதேச சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *