அக்கரைப்பற்று,கமு/ திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு புதிய பஸ் வண்டி ஒன்றினை ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசா அவர்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி வழங்க இருக்கிறார்.
ஜக்கிய மக்கள் சக்தியின் பிரபஞ்சம் எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக பாடசாலைகளுக்கு தேவையான பஸ் வண்டிகள் மற்றும் இதர கல்வி உபகரணங்களையும் தொடர்ச்சியாக ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா அவர்கள் வழங்கி வருகின்ற நிலையில்.
இதன் அடிப்படையில் அம்பாரை மாவட்டத்திலும் மூன்று பாடசாலைகளுக்கு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சிங்கள பாடசாலைக்கும் ஒரு முஸ்லிம் பாடசாலைக்கும் வழங்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக தமிழ் பாடசாலையான அக்கரைப்பற்று, கமு/ திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி அதாவது வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் பஸ் வண்டி வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.