Latest News
Home / இலங்கை / கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்ய செல்லும் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்ய செல்லும் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

நாட்டில் தீவிரமாக பரவி வரும் கோவிட் வைரஸ் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் சிறப்பங்காடிகள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் அடங்கிய வழிகாட்டி ஒன்று சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் சிறப்பங்காடிகளுக்கு பொருட்கள் வாங்க வரும் நுகர்வோர்களுக்கு இடையில் கட்டாயம் ஒன்றரை மீற்றர் இடைவெளி பேணப்பட வேண்டும் என அந்த வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அமுல்படுத்தப்படும் கோவிட் தடுப்பு கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *