2020 ஆம் ஆண்டு ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் சர்வதேச ஒலிம்பிக்போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இந்த ஒலிம்பிக்போட்டியில் வீரர்களையும், பார்வையாளர்களையும் வரவேற்பதற்காக புதிய ரோபோக்களை பயன்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மின்கலங்களினால் இயங்கக்கூடிய இலத்திரனியல் வாகனங்களையும், ஹைட்ரஜன் எரிபொருளினால் இயங்கக்கூடிய வாகனங்களையும் இந்த போட்டியில் பயன்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வாகனங்களை டொயோட்டோ நிறுவனம் வடிவமைத்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.