Latest News
Home / இலங்கை / ஒன்றரை வயது குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை: விசேட விசாரணை முன்னெடுப்பு

ஒன்றரை வயது குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை: விசேட விசாரணை முன்னெடுப்பு

நீர்கொழும்பு, பெரியமுல்ல பகுதியில் ஒன்றரை வயது பெண் குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெரியமுல்ல பகுதியில் உள்ள பாலமொன்றிற்கு அருகில் கடந்த 13ஆம் திகதி குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

துஷ்பிரயோகம் சம்பவத்தில் குழந்தையின் தலை, பாலத்தின் சுவர் அல்லது அங்கிருந்த பொருளொன்றில் மோதுண்டுள்ளதாக கருதப்படும் நிலையில், குழந்தை சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, குழந்தையின் தாயின் மறைமுகக் காதலனான 22 வயது இளைஞன் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து குழந்தையின் தாயும், காதலனின் சகோதரர் ஆகியோரை குறித்த சம்பவத்துக்கு ஒத்துழைத்தமை மற்றும் தகவல் மறைப்பு தொடர்பாக கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இதுதொடர்பாக நேற்றுமுன்தினம் நீதவான் விசாரணைகள் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் குழந்தையின் சடலம் குறித்த சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணையும் பிரேதப் பரிசோதனையும் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளமை குறித்த பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லர் தலைமையிலான குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *