இலங்கையின் சில மாவட்டங்களில் எதிர்வரும் நாட்களில் அதிகரித்த வெப்பமான வானிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முல்லைதீவு, வவுனியா, திருகோணமலை, பொலனறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு அதிக வெப்பமான வானிலை காணப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே இக்காலப்பகுதியில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.