Latest News
Home / இலங்கை / இரா.சம்பந்தன் தலைமையில் நாளை தமிழ் கட்சிகளுக்கு இடையில் சந்திப்பு !

இரா.சம்பந்தன் தலைமையில் நாளை தமிழ் கட்சிகளுக்கு இடையில் சந்திப்பு !

தமிழ் கட்சிகளுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நாளை செவ்வாய்க்கிழமை மாலை 5.30க்கு இடம்பெறவுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் குறித்த சந்திப்பானது, கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த சந்திப்புக்கு அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

இதன்போது, சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *