சுவிஸ் அருள்மிகு சிவன் கோவில் சைவத்தமிழ்ச் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பினால் வரம்புயர மரநடுகை செயற்திட்டத்தின் மூலம் இரண்டாம் கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பழவெளி மற்றும் பழைய வளத்தாப்பிட்டி கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு பயிர்கள், மரங்கள் மற்றும் விதைகள் வழங்கும் நிகழ்வு கிராம சேவகர் கே.ரவி அவர்களின் தலைமையில் முதியோர் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ]
இதில் விசேட அதிதியாக அம்பாறை மாவட்டத்தின் அன்பே சிவம் அமைப்பில் தொண்டரான இளம் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் அவர்களும் கிராமத்தின் கல்வி அபிவிருத்தி அமைப்பின் தலைவர் வெள்ளையன் விநோகாந் அவர்களும் மற்றும் முதியோர் சங்கத் தலைவர் குமரன் வெள்ளையன் அவர்களும் கலந்து கொண்டனர்.
இதில் 70 குடும்பங்களுக்கு பயிர் கன்றுகள், பழ மரங்கள் மற்றும் விதைகள் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் வீட்டுத்தோட்டம் செய்வதற்கான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன. உள்ளூர் உற்பத்திகளையும் வறிய மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதற்காக அன்பே சிவம் அமைப்பினால் பல வேலைத் திட்டங்களைச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.