Deprecated: Optional parameter $depth declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326

Deprecated: Optional parameter $args declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326
இணைந்த கரங்கள் அமைப்பினால் யாழ் 09 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு… – Website of Alayadivembu
Latest News
Home / இலங்கை / இணைந்த கரங்கள் அமைப்பினால் யாழ் 09 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

இணைந்த கரங்கள் அமைப்பினால் யாழ் 09 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

இணைந்த கரங்கள் அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் உள்ள 09 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் 25/03/2023 இன்றைய தினம் இணைந்த கரங்கள் அமைப்பினால் வழங்கி வைக்கப்பபட்டது.

இணைந்த கரங்கள்
பங்களிப்போடும் அனைவரின் ஆதரவோடும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 09 பாடசாலையில் இருந்து (202) மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் உறவுகளினால் மிகவும் வறுமைக் கோட்டிங்கீழ் வாழும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் (86 ) மாணவர்களுக்கு புத்தகப்பை என்பன 25/03/2023 இன்று காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாணம் உடுத்துறை இந்து ஆரம்ப பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்விற்கு கிளிநொச்சி வைத்திய சாலையின் உதவி மருத்துவர் திரு.த. ஜெகதீஸ்வரன், மருதங்கேனி கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.செல்லத்துறை ஸ்ரீ இராமச்சந்திரன், பாடசாலையின் அதிபர்களான திரு.சிவபாதம் ஜெயந்திரன், திரு.சின்னத்தம்பி ரங்கனாதன், ஆசிரியர்களான திருமதி கணேஸ்வரன் சந்திரகலா, திருமதி. சி. சுகந்தி, திருமதி. பகிஸ்வரன் சரிரா
ஆகியோர் கலந்துகொண்டனர்.

இணைந்த கரங்கள் உறவுகள் ஊடாக பயணிக்கும்

திரு,நவரத்தினம் ரூபரமேஷ், ஸ்ரீ கணேஷ் செலெக்க்ஷன் உரிமையாளர்,
திரு,குகேந்திரான் மாரிமுத்து, திரு,ரூபன் தருமலிங்கம். இவர்களின் தனிப்பட்ட நிதி பங்களிப்போடும். இதனுடன் இணைந்து
இணைந்த கரங்கள் உறவுகளின் பங்களிப்போடும் இந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை வழங்குவதற்கும் நிதிப் பங்களிப்பினை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

யா/மருதங்கேணி இ.த.க பாடசாலை,
யா/உடுத்துறை இ.த.க ஆரம்ப பாடசாலை,
யா/ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயம்,
யா/ உடுத்துறை ம.வி வித்தியாலயம்,
யா/வெற்லைக்கேணி றோ.க பாடசாலை,
யா/கேவில் அ.த.க.பாடசாலை,
யா/தாளையடி றோ.க. பாடசாலை,
யா/கட்டைக்காடு றோ.க.பாடசாலை,
யா/வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களில் தாய் தந்தையரை இழந்த மற்றும் அதி கஸ்ரத்தில் உள்ள (202)மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இன் நிகழ்வில் பெற்றோர்கள் மற்றும் இணைந்த கரங்கள் உறுப்பினர்களாகிய திரு.லோ.கஜரூபன், திரு.எஸ்.காந்தன், திரு.சி.துலக்சன்,திரு. தெ.சிருஸ்காந், ரெட்ணசிங்கம் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *