வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்டத்தில் அன்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் லயன்ஸ் கழகத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான நிவராணம் கிழக்கு மாகாண லயன்ஸ் கழகத்தின் 306 சி 2 பிரிவால் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் லயன்ஸ் கழகத்தின் மாகாண ஆளுநர் டொக்டர் ரசிக எஸ் பிரியங்க மற்றும் இரண்டாவது ஆளுநர் கம்லத் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் ஆளுநரின் இணைப்பாளருமான லயன் வி.ஜெகதீசன், மாகாண கபினட் செயலாளர் லயன் ஆனந்த மேலதிக கபினட் செயலாளர் பொறியியலாளர் லயன் ரஞ்சன் கபினட் பொருளாளர் லயன் ஸ்ரீரங்கன் அக்கரைப்பற்று லயனஸ் கழக தலைவர் லயன் பத்மசீலன் லயன் தர்மதாச உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பிரதேச செயலாளர் தலைமை உரையாற்றியதுடன் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் லயன்ஸ் கழகத்தின் நிவாரண ஏற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்தது பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து லயன் கழகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஆளுநர் உள்ளிட்டவர்கள் உரையாற்றியதுடன் சர்வதேச லயன்ஸ் கழகத்திற்கும் நன்றி தெரிவித்தார்.
பின்னர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு பொதிகளையும் வழங்கி வைத்தார்.