ஆலையடிவேம்பு கனகாம்பிகை பாலர் பாடசாலையில் 2024ம் ஆண்டிற்கான உழவர் திருநாளை சிறப்பிக்கும் பொங்கல் விழா மற்றும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் இன்று (09) காலை 10.00 மணியளவில் மிக சிறப்பாக நடைபெற்றது.
கனகாம்பிகை பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் J.நிரோஜினி, T.குலதர்ஷினி மற்றும் S.சிந்துஜா அவர்களின் தலைமையிலும் பெற்றோர்களின் பங்களிப்புடனும் இடம்பெற்ற நிகழ்வில் அதிதியக WDC தலைவி J.காந்திமதி கலந்து சிறப்பித்ததுடன் மேலும் பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் பாலர் பாடசாலையின் பழைய மாணவர்களினால் புதிய மாணவர்கள் மாலை அணிவித்து மகிழ்வுடன் அவர்களை வரவேற்கும் நிகழ்வும் மேலும் பொங்கல் நிகழ்வும் சிறப்பானதாக இடம்பெற்று இருந்தது.