Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று பொது மயானத்தைத் துப்பரவு செய்யும் சிரமதான பணியில் இணைந்து கொள்ள அழைப்பு….

அக்கரைப்பற்று பொது மயானத்தைத் துப்பரவு செய்யும் சிரமதான பணியில் இணைந்து கொள்ள அழைப்பு….

அக்கரைப்பற்று பொது மயானத்தைத் துப்பரவு செய்யும் சிரமதான பணி ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16.02.2024) காலை 6.00 மணிமுதல் இடம் பெறவுள்ளது.

இந்த சிரமதான பணியில் தன்னார்வமாக அனைவரும் கலந்து கொண்டு தங்களால் முடிந்த ஒத்துழைப்பை வழங்குமாறு ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் கேட்டுக்கொள்கின்றார்கள்.

ஆலையடிவேம்பு பிரதேச பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டுவரும் குறித்த மயானமானது நீண்டகாலமாக துப்பரவுப் பணிகளும் இடம்பெறாத நிலையில் மரம், செடி, முட்புதர்கள், பற்றைக் காடுகள், கற்கள் என்பனவற்றோடு குப்பைகளும் நிறைந்து காணப்படுவதனால் தற்போதைய சூழலில் குறித்த சிரமதான பணி மேற்கொள்வது மிக முக்கியமானதாகவும் காணப்படுகிறது.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *