Latest News
Home / இலங்கை / ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் – நாமல்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் – நாமல்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், அவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்பதை கண்டறிய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதியை வீட்டுக்குப் போகச் சொல்கிறார்களே, அப்போது பிரதமரும் வீட்டுக்குப் போக வேண்டுமா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய அவர் “இது இன்று வந்தவை அல்ல, ஜே.ஆரை கொன்று விடுவோம் என்று பலகையை அடித்தார்கள். இதற்கு குழப்பமடையாமல் அவர்கள் ஏன் அப்படி கூறுகிறார்கள் என்பது தொடர்பில் கண்டறிய வேண்டுவதோடு, தலை வலி இருப்பவருக்கு உடம்பு வலிக்கு மருந்து கொடுத்து சரிவராது” எனவும் குறிப்பிட்டார்.

மேலும் பிரச்சினைகளை மூடி மறைப்பதில் எவ்வித பயனும் இல்லை என்பதோடு நோய்க்கு தேவையான சிகிச்சையை அளிப்பதை விடுத்து வேறு நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் பயனில்லை என்றும் தெரிவித்தார்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *