Latest News
Home / இலங்கை / ஆரையம்பதி பிரதேசத்தில் அதிகாலையில் 21 வயது இளம்பெண்ணை வீடு புகுந்து கடத்திய குழு!

ஆரையம்பதி பிரதேசத்தில் அதிகாலையில் 21 வயது இளம்பெண்ணை வீடு புகுந்து கடத்திய குழு!

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிறகு வெள்ளை வான் ஒன்றில் சென்ற 4 பேர் கொண்ட குழுவினர் இன்று (23) அதிகாலை வீட்டை உடைத்து தாக்குதலை நடாத்திவிட்டு நித்திரையில் இருந்த 21 வயதுடைய யுவதி ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காதான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி ஜுனியர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இரு பெண் பிள்ளைகள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த வீட்டை சம்பவ தினமான இன்று அதிகாலை ஒரு மணிக்கும் 1.30 மணிக்கும் இடையில் வெள்ளைவான் ஒன்றில் வந்த குழுவினர் வீட்டின் வெளிக்கதவின் பூட்டினை உடைத்து வீட்டின் வாசல்கதவை உடைத்து உள்நுழைந்த போது வீட்டின் உரிமையாளர் அவர்களை பொல்லால் தாக்கிய போதும் அவர்கள் அவரை திருப்பி தாக்கிவிட்டு நித்திரையில் இருந்த 21 வயது யுவதியை கடத்திச் சென்றுள்ளார் .

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *