Latest News
Home / இலங்கை / அன்னை சிவகாமி அறக்கட்டளை நிதியத்தின் உதவியுடன் 100 சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கிவைப்பு…..

அன்னை சிவகாமி அறக்கட்டளை நிதியத்தின் உதவியுடன் 100 சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கிவைப்பு…..

அன்னை சிவகாமி அறக்கட்டளை பத்து வருடங்களுக்கு மேலாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் முழுவதும் சேவைகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அன்னை சிவகாமி அறக்கட்டளையின் ஸ்தாபகரான திரு.திருமதி சத்தியரூபன் பாலராஜி தம்பதிகளின் செல்வப்புதல்வி சாய்ரூபாவின் 6வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று பொத்துவில் ஊரணி, கணகர் கிராமத்திலுள்ள 100 சிறுவர்களுடன் மதிய உணவு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி கொண்டாடியுள்ளார்.

அதுமட்டுமன்றி தரம் – 5 மற்றும் உயர்தர மாணவர்களுக்கான விசேட கல்வித் திட்டத்துக்கான செயலட்டைகள் மற்றும் சம்மாந்துறை சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தின் சுற்று வேலி அமைத்தல் போன்ற சேவைகளையும் பிறந்தநாளை முன்னிட்டு செய்துள்ளார்.

இதனை யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார் பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.

 

 

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *