நன்றி -பார்த்திபன் சுந்தரவடிவேல் –
ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பகுதிக்கு உட்பட்ட அக்கரைப்பற்று-08ம் கிராம அபிவிருத்தி சங்கத்தால் (R.D.S) இன்று (28.08.2022) ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதியின் சுற்றுசூழல் பகுதி சுத்தம் செய்யும் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
நாடளாவிய ரீதியில் தற்போது டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டு வருகின்ற நிலைகளிலும், நாடளாவிய ரீதியில் மழைப்பொழிவு காணப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த சிரமதானப்பணியானது மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.
மேலும் இதுபோன்று ஆலையடிவேம்பு பிரதேசங்களின் ஏனைய பகுதிகளிலும் இதுபோன்று சிரமதான செயற்பாடுகள் மேற்க்கொள்ள வேண்டிய தேவைப்பாடு உடையதாகவும் காணப்படுகின்றது.