அக்கரைப்பற்று, சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் 32வது பாலர் கலைவிழா நிகழ்வு இன்று (21) மாலை 3.00 மணியளவில் இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் இறைபணிச்செம்மல் திரு.த.கயிலாயபிள்ளை அவர்கள் தலைமையில் இந்து இளைஞர் மன்ற கேட்போர் மண்டபத்தில் இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், சுவாமி விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலைய இயக்குனர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் அவர்களின் ஒருங்கிணைப்புடன் கோலாகலமாக இடம்பெற்றது.
அதிதிகள் மாலையிட்டு வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வுகளில் சிறார்களின் நடனங்கள், பேச்சுக்கள், மேடை நாடகங்கள் என பல கலை நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டதுடன் அதிதிகள் உரைகள் என்பனவும் இடம்பெற்றது.
நிகழ்வில் பல அதிதிகள், பாலர் பாடசாலை மாணவர்கள், பெற்றார்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.