அக்கரைப்பற்று, இராமகிருஸ்ன மிஷன் மகா வித்தியாலயத்தின் இராணுவ மாணவர் சிப்பாய் படையணியின் sergeant பதவிக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு அதிபர் திருமதி.R.நித்தியானந்தன் மற்றும் பிரதி அதிபர் Cpt.திரு.K.ஜனார்தன் (கெப்டன்) தலைமையில் நேற்றய தினம் (22) காலை பாடசாலை ஒன்றுகூடலில் நடைபெற்றது.
இராணுவ மாணவர் சிப்பாய் படையணியின் sergeant பதவிக்கான பாடநெறியை ரந்தம்மே NCC முகாமில் 07 நாட்கள் பயிற்சியை முடித்த S.அஸ்வின் மற்றும் S.சுவிதரன் எனும் இரண்டு மாணவர்களுக்கே sergeant பதவிக்கான சின்னம் சூட்டப்பட்டது.
இவ் நிகழ்வில் பதில் உப அதிபர் திரு.N நேசராசா மற்றும் இராணுவ மாணவர் சிப்பாய் பொறுப்பு ஆசிரியர் திரு.Y.தியாகராஜன் (Platoon Commander) ஆகியோர் கலந்து கொண்டனர்.