Latest News
Home / ஆலையடிவேம்பு / சமயம் சார்ந்து பணிபுரியும் சமூக மட்ட அமைப்புக்களுக்கிடையிலான நல்லிணக்க கலந்துரையாடல் அக்கரைப்பற்று சுவாட் ஒன்று கூடல் மண்டபத்தில்…

சமயம் சார்ந்து பணிபுரியும் சமூக மட்ட அமைப்புக்களுக்கிடையிலான நல்லிணக்க கலந்துரையாடல் அக்கரைப்பற்று சுவாட் ஒன்று கூடல் மண்டபத்தில்…

வி.சுகிர்தகுமார் 

 சமயம் சார்ந்து பணிபுரியும் சமூக மட்ட அமைப்புக்களுக்கிடையிலான வலையமைப்பை ஏற்படுத்தி அவர்களுக்கூடாக நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் செயற்பாட்டை அம்பாரை மாவட்ட பாதிப்புற்ற பெண்கள் அரங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இதற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட கலந்துரையாடல் அக்கரைப்பற்று சுவாட் ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

அம்பாரை மாவட்ட பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மாவட்டத்தில் பணியாற்றும் பல இனத்தை சார்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

பாதிப்புற்ற பெண்கள் அரங்கமானது பெண்கள் தொடர்பான பல்வேறு விடயங்களை கையாள்வதுடன் பெண்களிடையே விழிப்புணர்வையும் அவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தும்  வருகின்றது.

அந்த வகையிலேயே சமயங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாட்டையும் முன்னெடுத்துள்ளது.

இக்கலந்துரையாடலில் நல்லிக்கத்தை ஏற்படுத்த சமூக மற்றும் அரசியல் மட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அத்தோடு குழுச் செயற்பாடுகள் மூலமும் தகவல்கள் பரிமாறப்பட்டது.

 

Check Also

SRK விஞ்ஞான கழகம் நடாத்திய இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா- 2024

அக்கரைப்பற்று, கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) 02/04/2024 இன்றையதினம் ‘இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா’ விஞ்ஞான ஆய்வு கூடத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *