Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின் பத்தாம்நாள் பாற்குட பவனி நிகழ்வு இன்று…

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின் பத்தாம்நாள் பாற்குட பவனி நிகழ்வு இன்று…

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கன சார்வரி வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா (22.08.2020) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது.

இதனைத்தொடர்ந்து நாளாந்தம் திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது அந்த வகையில் இன்றைய தினம் (01.09.2020) பத்தாம்நாள் திருவிழாவின் காலை நிகழ்வாக பாற்குட பவனி நிகழ்வு ஆலய தலைவர் ஜெகநாதன் மற்று ஆலய பரிபாலன சபையினர் தலைமையில் சிவ ஸ்ரீ.ஸ்கந்த.வரதேஸ்வரக் குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்று. அத்துடன் விசேட நிகழ்வாக ஆலையடிவேம்பு பிரதேச முருக பக்த அடியார்களினால் அன்னதானம் வழங்கிவைக்கப்பட்டது.

இன்றைய நாள் திருவிழா நிகழ்வுகளுக்கு நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டு சிறப்பாக இடம்பெற்று இனிதே நிறைவடைந்தது.

 

 

 

 

 

 

Check Also

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இலங்கை முன்னணி இசைக் கலைஞர்களுடன் Rhythm’s with VIP இணைந்து வழங்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி எதிர்வரும் 14 அன்று….

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இலங்கை முன்னணி இசைக் கலைஞர்களுடன் Rhythm’s with VIP இணைந்து எதிர்வரும் 2024.04.14 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *