Latest News
Home / ஆலையடிவேம்பு (page 73)

ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு பிரதேச சபை ஆளுங்கட்சி பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு – தவிசாளர் த.கிரோஜாதரன் தலைமையில் ஊடகவியலாளர் மாநாடு…

வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் ஆட்சியை கைப்பற்றிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் தமது முழு ஆதரவையும் பொதுஜன பெரமுனவிற்கு வழங்க தீர்மானித்துள்ளதாக இன்று தெரிவித்தனர். சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் தங்கையா கிரோஜாதரன் தலைமையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே இத்தீர்மானத்தை உறுப்பினர்கள் இணைந்து வெளியிட்டனர். ஆலையடிவேம்பு பிரதேச சபையினை கடந்த இரு வருடங்களாக தமிழர் விடுதலை கூட்டணி …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் மொட்டுக்கட்சியின் அலுவலக திறப்பு விழா – நவசிகல உறுமய கட்சி மொட்டுக்கட்சியுடன் இணைவு!

வி.சுகிர்தகுமார்   அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்ட நவசிகல உறுமய கட்சி மொட்டுக்கட்சியுடன் நேற்று இணைந்து கொண்டது. அம்பாரை மாவட்ட நவசிகல உறுமய கட்சியின் சார்பில் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடும் தலைமை வேட்பாளர் தாமோதரம் ஜெயாகர் தலைமையிலான 10 வேட்பாளர்களும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் மொட்டுக்கட்சியின் தலைமை வேட்பாளருமான விமலவீர திசாநாயக்க மற்றும் வேட்பாளர் வீரசிங்க ஆகியோர் முன்னிலையில் மொட்டுக்கட்சியுடன் இணைந்து கொண்டனர். அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் நேற்று (26) இடம்பெற்ற …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளராக த.கிறோஜாதரன் அவர்கள் இன்று கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.

ஆலையடிவேம்பு பிரதேச சபையின் புதிய தவிசாளராக த.கிறோஜாதரன் அவர்கள் இன்று (21) கடமைகளை பொறுப்பேற்று கொண்டார். இன்றைய தினம் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர்களினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு இன்றைய தினமே தவிசாளர் பதவியினை பொறுப்பேற்று கொண்டார். ஆலையடிவேம்பு பிரதேச சபையின் புதிய தவிசாளர் த.கிறோஜாதரன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்காமல் நிகழ்வுகள் நடைபெற்று முடிந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி – (த.கிறோஜாதரன் உறுப்பினர் பிரதேச சபை) …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பில் டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 7 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு-100 இற்கும் மேற்பட்டவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை கடிதம்

வி.சுகிர்தகுமார்   ஆலையடிவேம்பில் டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 7 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டதுடன் 100 இற்கும் மேற்பட்டவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை கடிதங்களும் வழங்கப்பட்டதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்  தெரிவித்தார். ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று 300இற்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட டெங்கு பரிசோதனையின் போதே குறித்த இடங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் …

மேலும் வாசிக்க

சுவாமிகள் நீலமயானந்தா மகராஜ் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு வருகை – அறுபது ஆண்டுகளின் பின்னர் ராமகிருஷ்ண மிஷன் திருக்கோவிலை புனருத்தாரணம் செய்யமுயற்சி…

வி.சுகிர்தகுமார் மட்டக்களப்பு ராமகிருஸ்ண மிசன் ஆஷ்ரமா மற்றும் சிறுவர் இல்லத்தின் சுவாமிகள் நீலமயானந்தா மகராஜ் அவர்கள் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு இன்று வருகை தந்தார். அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்திற்கு வருகை தந்த சுவாமி உள்ளிட்டவர்களை இல்லத்தின் ஸ்தாபகர் இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளையின் தலைமையிலான இயக்குனர் சபை உறுப்பினர்கள் இராமகிருஸ்ண மிசன் பழைய மாணவர்கள் மற்றும் இல்ல மாணவர்கள் பொதுமக்கள் இணைந்து வரவேற்றனர். வருகை தந்த சுவாமி …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று சாகாமம் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து – நால்வர் வைத்தியசாலையில்…

வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று சாகாமம் பிரதான வீதியில் கோளாவில் பிரதேசத்தில் இன்று(17) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் நால்வர்; காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் மூன்று ஆண்கள் உட்பட பெண்னொருவரும்; என தெரிவிக்கப்படுகின்றது. முன்னால் சென்று கொண்டிருந்த வாகனமொன்றை முந்தி செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். கோளாவில் பிரதேசத்தில் இருந்து அக்ககரைப்பற்றை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் முன்னால் சென்று கொண்டிருந்த …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு மக்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச சபை விடுக்கும் முக்கிய அறிவித்தல்: நாளைமுதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிப்பு…ஆதங்கத்துடன் மக்கள்!!

ம.கிரிசாந் ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படும் ஆலையடிவேம்பு பிரதேச வீடுகளில் திண்மக்கழிவகற்றல் செயற்பாடானது நாளைமுதல் புதிய நடைமுறையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளதாக மக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர். பிரதேச வீடுகளில் பெற்றுக்கொள்ளப்படும் திண்மக்கழிவுகளில் உக்கக்கூடிய கழிவுகளை மாத்திரம் நாளை (17) முதல் பெற்றுக்கொள்ள உள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச சபையினர் மக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர். மக்கள் திண்மக்கழிவுகள் வழங்கும் போது உக்கக்கூடிய கழிவுகள், உக்காத கழிவுகள் என தரம் பிரித்து உக்கக்கூடிய கழிவுகளை …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகளுக்கு கைகழுவும் பாத்திரங்களை அம்பாரை மாவட்ட சமய நல்லிணக்க சபையானது வழங்கி வைத்தது.

வி.சுகிர்தகுமார் பாடசாலைகளுக்கு தேவையான கைகழுவும் பாத்திரங்களை தனியார் தொண்டு நிறுவனங்களும் அமைப்புக்களும் வழங்கி வருகின்றது. இதற்கமைவாக அம்பாரை மாவட்ட சமய நல்லிணக்க சபையானது ஆலையடிவேம்பில் உள்ள இரு பாடசாலைகளுக்கு தேவையான காலால் செயற்படுத்தும் கைகழுவும் பாத்திரங்களை இன்று வழங்கி வைத்தது. நல்லிணக்க சபையின் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கான தலைவர் த.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சமய நல்லிணக்க சபையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் அக்கரைப்பற்று அன்னை சாரதா வித்தியாலயம் மற்றும் திருவள்ளுவர் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுமூகமான முறையில் தபால்மூல வாக்களிப்பு இன்று..

வி.சுகிர்தகுமார்   2020 பொதுத்தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நேற்றுமுதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இதற்கமைவாக இரண்டாம் நாளான இன்று (14) பிரதேச செயலகம் மற்றும் அரச திணைக்களங்களிலும் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றன. ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுமூகமான முறையில் தபால்மூல வாக்களிப்புகள் இன்று காலை முதல் இடம்பெறுகின்றன. 118 உத்தியோகத்தர்கள் வாக்களிப்பிற்காக தகுதி பெற்றுள்ள நிலையில் தகுதி பெற்றவர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டதை இங்கு காண …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் அறுவடை விழாவும் பூஜை வழிபாடுகளும் மரநடுகையும்…..

வி.சுகிர்தகுமார் அறுவடை விழாவும் பூஜை வழிபாடுகளும் மரநடுகையும் அக்கரைப்பற்று விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் இலண்டன் உதவும் கரங்கள் அமைப்பின் நிதி பங்களிப்புடன் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அறுவைச் சிகிச்சை நிபுணருமான வைத்தியர் பி.கே.ரவீந்திரனின் பிரசன்னத்துடன் சாகாமம் வால்கட்டு பிள்ளையார் ஆலயத்தை அண்டிய வயல் பிரதேசத்தில் நேற்று (09) நடைபெற்றது. நிலையத்தின் தலைவரும் இறைபணிச்செம்மலுமான த.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற அறுவடை விழாவில் அம்பாரை மாவட்ட அரசாங்க …

மேலும் வாசிக்க