Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகளுக்கு கைகழுவும் பாத்திரங்களை அம்பாரை மாவட்ட சமய நல்லிணக்க சபையானது வழங்கி வைத்தது.

ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகளுக்கு கைகழுவும் பாத்திரங்களை அம்பாரை மாவட்ட சமய நல்லிணக்க சபையானது வழங்கி வைத்தது.

வி.சுகிர்தகுமார்

பாடசாலைகளுக்கு தேவையான கைகழுவும் பாத்திரங்களை தனியார் தொண்டு நிறுவனங்களும் அமைப்புக்களும் வழங்கி வருகின்றது.

இதற்கமைவாக அம்பாரை மாவட்ட சமய நல்லிணக்க சபையானது ஆலையடிவேம்பில் உள்ள இரு பாடசாலைகளுக்கு தேவையான காலால் செயற்படுத்தும் கைகழுவும் பாத்திரங்களை இன்று வழங்கி வைத்தது.

நல்லிணக்க சபையின் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கான தலைவர் த.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சமய நல்லிணக்க சபையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் அக்கரைப்பற்று அன்னை சாரதா வித்தியாலயம் மற்றும் திருவள்ளுவர் வித்தியாலய அதிபர்கள் பங்கு கொண்டு கைகழுவும் பாத்திரங்களை பெற்றுக்கொண்டனர்.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *