Latest News
Home / ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் சிரமதானம்….

      சிரமதான பணி அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையிலும், அமைப்பின் ஆலோசகர் சி.கனகரெத்தினம் (ஓய்வுபெற்ற பிரதம கணக்காய்வாளர்) அவர்களின் ஆலோசனையிலும் மிகவும் நேர்த்தியான முறையில் சிரமதான பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த சிரமதானத்திற்கான முழுமையான ஒத்துழைப்பை பனங்காடு பிரதேச வைத்தியசாலை நிர்வாகத்தினர் வழங்கியதுடன். அவர்களால் சிரமதானம் மேற்கொண்டவர்களுக்கு தேநீர் ஆகாரம் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த செயற்பாடுகளை பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்கத்தின் பொருளாளர் வைத்தியர் …

மேலும் வாசிக்க

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இலங்கை முன்னணி இசைக் கலைஞர்களுடன் Rhythm’s with VIP இணைந்து வழங்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி எதிர்வரும் 14 அன்று….

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இலங்கை முன்னணி இசைக் கலைஞர்களுடன் Rhythm’s with VIP இணைந்து எதிர்வரும் 2024.04.14 ம் திகதி தர்மசங்கரி மைதானத்தில் (S.R.K தேசிய கல்லூரிக்கு அருகாமையில்) பி.ப 07 மணியளவில் தமிழ் சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மேலும் உற்சாகப்படுத்தும் நோக்குடன் பிரம்மாண்டமான இசைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூகங்கள் மத்தியில் ஒற்றுமை மற்றும் சமூக புரிந்துணர்வை ஏற்படுத்த பங்களிப்பு வழங்கும் நோக்குடனும், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, திருக்கோவில் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட பாடசாலைகளில் ”பசுமை மீட்சிப் போராட்டம்” மின்மினி மின்ஹா இன் விழிப்புணர்வு பிரச்சாரம்….

பசுமை மீட்சிப் போராட்டம் எனும் தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை பசுமை மீட்சி மற்றும் சூழல் மாற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை சது/அல்/அர்சத் மகா வித்தியாலயத்தின் மாணவியான செல்வி J.பாத்திமா மின்ஹா (மின்மினி மின்ஹா) மேற்கொண்டு வருகின்ற நிலையில். ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட பாடசாலைகளான அக்கரைப்பற்று, கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை), க்கரைப்பற்று அன்னை சாரதா கலவன் பாடசாலை, திருநாவுக்கரசு வித்தியாலயம் ,கண்ணகி வித்தியாலயம் மற்றும் புனித சவேரியார் வித்தியாலயம் ஆகிய …

மேலும் வாசிக்க

SRK விஞ்ஞான கழகம் நடாத்திய இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா- 2024

அக்கரைப்பற்று, கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) 02/04/2024 இன்றையதினம் ‘இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா’ விஞ்ஞான ஆய்வு கூடத்தில் பாடசாலை பதில் அதிபர் திரு.K.ஜயந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. மாணவர்கள் தங்களது ஆக்க பூர்வமான புத்தாக்க கண்டு பிடிப்புங்களை காட்சிப்படுத்திருந்தனர். மேலும் இன் நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு.K. கமலமோகனதாசன், Dr. திருமதி.சி. குணாளினி- MO (பிரதேச வைத்திய சாலை பனங்காடு) …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend Primer Leakege கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 29 அன்று ஆரம்பம்….

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend Primer Leakege கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது இம்மாதம் 29, 30, 31ம் திகதிகளில் திருக்கோயில், அக்கரைப்பற்று பிரதேசங்களில் நடாத்துவதற்கு போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர். உள்ளூர் கிரிக்கெட் பிரியர்களையும் இளந்தலைமுறை கிரிக்கட் விளையாட்டு வீரர்களையும் ஊக்கப்படுத்தும் முகமாகவும் மேலும் அவர்களுக்கு சிறந்த விளையாட்டு வழிகாட்டுதலுக்குமாக, நாற்பது வயதிற்கு மேற்பட்ட …

மேலும் வாசிக்க

மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை….

மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு இன்று (22) பாலர் பாடசாலை ஆசிரியர்கள் P.சுபாஜினி மற்றும் ஜஸ்மிலா தலைமையிலும் பெற்றோர்களின் பங்களிப்புடனும் நேர்த்தியான ஒருங்கிணைப்புடன் இடம்பெற்றது. நிகழ்வில் அதிதியாக மகாசக்தியின் செயலாளரும் முகாமையாளருமா S.திலகராஜன், கூட்டுறவு திணைக்கள உத்தியோகத்தர் K. காந்தரூபன், திருக்கோவில் வலயக்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் முன்பள்ளி பிள்ளை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் S.விவேகானந்தராஜா, அம்பாறை மாவட்ட பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் முகாமைத்துவ உதவியாளர் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு கனகாம்பிகை பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை….

 -ஹரிஷ்- ஆலையடிவேம்பு கனகாம்பிகை பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு இன்று (22) பாலர் பாடசாலை ஆசிரியர்கள் J.நிரோஜினி, T.குலதர்ஷினி மற்றும் S.சிந்துஜா அவர்களின் தலைமையிலும் பெற்றோர்களின் பங்களிப்புடனும் நேர்த்தியான ஒருங்கிணைப்புடன் இடம்பெற்றது. நிகழ்வில் அதிதியாக மகளிர் அபிவிருத்தி நிலைய தலைவி திருமதி. காந்திமதி ஜோய், திருக்கோவில் வலயக்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் முன்பள்ளி பிள்ளை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் S.விவேகானந்தராஜா, அம்பாறை மாவட்ட பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் முகாமைத்துவ …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு, உதயம் விளையாட்டுக் கழகத்தின் தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா – 2024 கோலாகலமாக நடாத்தப்பட ஏற்பாடு….

ஆலையடிவேம்பு, உதயம் விளையாட்டுக் கழகம் நடாத்தும் தமிழ்,சிங்கள சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா மற்றும் இசை நிகழ்வு எதிர்வரும் (19/04/2024) வெள்ளிக்கிழமை நண்பகல் 2.00 மணிமுதல் ஆலையடிவேம்பு , ஸ்ரீ முருகன் ஆலய மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடாத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ”விளையாட்டினுடாக பாரபட்சமற்ற சமூக ஒற்றுமையினை மேன்படுத்தல்” எனும் நோக்குடன் குறித்த நிகழ்வுகள் உதயம் விளையாட்டுக் கழகத்தினரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன். அன்றைய தினம் சீட்டிழுப்பின் மூலமாக பெறுமதி மிக்க …

மேலும் வாசிக்க

வெற்றிகரமாக இடம்பெற்ற தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு….

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ளவர்கள் தங்களது கற்கை நெறிகளை எவ்வாறு தெரிவு செய்வது, எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது தொடர்பான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு ”சத்தியம்” வாழும் போதே வழங்கிடுவோம் (இலண்டன்) அமைப்பு மற்றும் Alayadivembuweb.lk இணையக்குழுவினர் பூரண ஏற்பாட்டில் ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) பதில் அதிபர் க.ஜயந்தன் தலைமையில் இன்றைய தினம் (20) வெற்றிகரமாக இடம்பெற்றது. கருத்தரங்கு ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி …

மேலும் வாசிக்க

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கு துறைசார் விரிவுரையாளர்களை கொண்டு இலவச வழிகாட்டல் கருத்தரங்கு…

இம்முறை தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கு தங்களது கற்கை நெறிகளை எவ்வாறு தெரிவு செய்வது, எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது தொடர்பான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு ”சத்தியம்” வாழும் போதே வழங்கிடுவோம் (இலண்டன்) அமைப்பு மற்றும் Alayadivembuweb.lk இணையக்குழுவினர் இணைந்து கல்வியல் கல்லூரியின் பொறுப்புமிக்க துறைசார் விரிவுரையாளர்களை கொண்டு எதிர்வரும் (20.03.2024) புதன்கிழமை அன்று ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. கலந்து கொள்ளவுள்ளவர்கள் தங்களது பெயர் விபரங்களை முன்கூட்டியே பதிவு செய்யுமாறு வேண்டிக் கொள்கின்றோம். …

மேலும் வாசிக்க