Latest News
Home / விளையாட்டு (page 14)

விளையாட்டு

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: எதிர்பார்ப்பு மிக்க இலங்கை அணி அறிவிப்பு!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் எதிர்பார்ப்பு மிக்க இலங்கை கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. குசல் ஜனித் பெரேரா தலைமையிலான இந்த அணியில், ஷிரான் பெனார்டோ, பினுர பெனார்டோ, அசித பெனார்டோ, சாமிக கருணாரத்ன, ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் அறிமுக வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். அத்துடன் திமுத் கருணாரத்ன அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், முன்னணி வீரர்களான அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோருக்கு அணியில் இடம் …

மேலும் வாசிக்க

உயரம் பாய்தல் போட்டியில் உஷான் திவங்க புதிய சாதனை

ஸ்டார் கன்பரன்ஸ் சம்பியன்சிப் (Star Conference Championship) போட்டியில் இலங்கை நாட்டு வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். உயரம் பாய்தல் போட்டியில் இலங்கையை சேர்ந்த உஷான் திவங்க புதிய இலங்கை மற்றும் தென் ஆசிய சாதனையை படைத்துள்ளார். 2.35 உயரம் பாய்ந்து அவர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க

ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளை நடத்த இலங்கை விருப்பம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிர நிலையை அடுத்து, 2021 ஐ.பி.எல். இருபதுக்கு-20 தொடரின் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், எஞ்சியுள்ள போட்டிகளை நடத்தத் தயாராக இருப்பதாக இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளை இலங்கையில் நடத்த முடியும் எனவும் இதற்காக செப்டம்பரில் போட்டியை நடத்துவதற்காக மைதானங்கள் தயாராகிவிடும் என்றும் இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் அர்ஜூன டி.செல்வா தெரிவித்துள்ளார். அத்துடன், ஐ.பி.எல். தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை நடத்துவதற்கான …

மேலும் வாசிக்க

டெஸ்ட் தரவரிசை; திமுத் கருணாரத்ன 11 ஆவது இடம்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் உள்ளார். இந்திய அணியின் கப்டன் விராட் கோலி 5 ஆவது இடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார். இலங்கை அணியின் கப்டன் திமுத் கருணாரத்ன 11 ஆவது இடம் வகிக்கிறார். இதேபோன்று பங்களாதேஸின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால் 3 இடங்கள் முன்னேறி 27 ஆவது இடத்திற்கு வந்துள்ளார். …

மேலும் வாசிக்க

நாடு திரும்ப முடியாத நிலையில் மஹேல ஜயவர்தன!!

ஐ.பி.எல் போட்டித் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றும் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தனவிற்கு நாடு திரும்ப முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விமானப் பயணங்கள் முழுமையாக இடை நிறுத்தப்பட்டுள்ளமையினால் அவரால் நாடு திரும்ப முடியாதுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கோவிட் நோய்த் தொற்று பரவுகையினால் இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடர் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள …

மேலும் வாசிக்க

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பினை பெற்றுள்ள மற்றுமொரு இலங்கையர்!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கு இலங்கை சார்பில் மில்கா கெஹானி கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இம்முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது இலங்கையராக இவர் பதிவாகியுள்ளார். இதற்கு முன்னர் குதிரை சவாரி போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை சார்பில் மெட்டில்டா கார்ல்சன் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

ஒலிம்பிக் குதிரை சவாரி போட்டியில் கலந்து கொள்ளும் முதலாவது இலங்கையர்!

2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் குதிரை சவாரி போட்டிக்கு இலங்கை சார்பில் மெட்டில்டா கார்ல்சன் கலந்து கொள்ளவுள்ளார். விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு இதனை தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் குதிரை சவாரி போட்டியில் கலந்து கொள்ளும் முதலாவது இலங்கையர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: மூன்றாம்நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 229-3

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்போது களத்தில் திமுத் கருணாரத்ன 85 ஓட்டங்களுடனும் தனஞ்சய டி சில்வா 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர். பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடனும் ஒப்பிடுகையில், இலங்கை கிரிக்கெட் அணி …

மேலும் வாசிக்க

புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த CSK!

மும்பையில் நடைபெற்ற பரபரப்பான டி20 ஆட்டத்தில் கொல்கத்தாவை வென்ற சிஎஸ்கே அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வென்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ஓட்டங்கள் விளாச, அடுத்து ஆடிய கொல்கத்தா 19.1 ஓவர்களில் 202 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சென்னை துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டிய டு பிளெசிஸ் …

மேலும் வாசிக்க

இலங்கை கிரிக்கெட் வீரரொருவர் தொடர்பில் விசாரணை!

தென் மாகாணத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் போது தேசிய கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவர் மோதலில் ஈடுபட்டதாக வௌியான ஊடக செய்தி தொடர்பில் விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இந்த விசாரணையின் நோக்கம் உண்மையை வௌிப்படுத்துவதே ஆகும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க