Latest News
Home / ஆலையடிவேம்பு / “சத்தியம்” வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினரினால் ஆலையடிவேம்பு கோட்டத்திற்கு உட்பட்ட 5வது பாடசாலைக்கும் மதில் சுவர்கள் ஓவியங்கள்!

“சத்தியம்” வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினரினால் ஆலையடிவேம்பு கோட்டத்திற்கு உட்பட்ட 5வது பாடசாலைக்கும் மதில் சுவர்கள் ஓவியங்கள்!

“சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பின் ஸ்தாபகர் சத்தியமூர்த்தி அவர்களினால் ஆலையடிவேம்பு கோட்டத்திற்கு உட்பட்ட பல பாடசாலைகளுக்கு கட்டம் கட்டமாக பல உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் மாணவர்களின் மகிழ்வான சூழலையும் ஏற்படுத்தி மனமகிழ்வுடன் கற்பதை ஊக்குவிக்கும் முகமாக பாடசாலைகளுக்கு சுவர்களில் கல்வி சம்பந்தப்பட்ட அழகிய மதில் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் அதனில் 04ஆம் கட்டமாக கமு/திகோ/ பெருநாவலர் வித்தியாலயத்திற்கு விழிப்புணர்வு ஒவியங்களாலும் , மகுட வாக்கியங்களாலும் முன் மதில் அழகுபடுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து தற்போது 05வது பாடசாலையாக கமு/திகோ/அக்கரைப்பற்று விவேகானந்த பாடசாலையின் வெளிப்புற சூழல் அலங்கரிக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான வேலைகளும் இடம்பெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல பாடசாலைகளுக்கு தற்போது தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக மாணவர்களுக்கு சான்றிதழ்களும் “சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினால் வழங்கப்பட்டு வருகின்றது.

Check Also

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இலங்கை முன்னணி இசைக் கலைஞர்களுடன் Rhythm’s with VIP இணைந்து வழங்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி எதிர்வரும் 14 அன்று….

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இலங்கை முன்னணி இசைக் கலைஞர்களுடன் Rhythm’s with VIP இணைந்து எதிர்வரும் 2024.04.14 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *