Latest News
Home / இலங்கை / சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல அரசாங்கம் தயாராக உள்ளது என்கின்றார் அமைச்சர்!

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல அரசாங்கம் தயாராக உள்ளது என்கின்றார் அமைச்சர்!

நாட்டின் கடனை மறுசீரமைக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விடயம் விவாதிக்கப்படவில்லை என்றாலும் இது குறித்து பேசப்பட்டதாக கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் பெறப்பட்ட பெரும்பான்மையான கடனை மீள்கட்டமைப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடியதாக அவர் கூறினார்.

இதேவேளை தற்போது நாட்டில் நிலவும் நெருக்கடியை சுமார் ஆறு மாதங்களுக்குள் சமாளிக்க முடியும் என நம்புவதாக ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

Check Also

மரதன் ஓடிய திருக்கோவில் மாணவன் மரணம்: போராட்டத்தை முன்னெடுத்துள்ள பொதுமக்கள்! விபரம்

அம்பாறை மாவட்ட, திருக்கோவில் பகுதியில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய 16 வயதுடைய மாணவரொருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *