Latest News
Home / இலங்கை / ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா ஒருபோதும் செயற்படாது – ஜி.எல். பீரிஸ்

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா ஒருபோதும் செயற்படாது – ஜி.எல். பீரிஸ்

ஜெனீவா விவகாரத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா ஒருபோதும் செயற்படாது என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஜெனீவா விவகாரத்தில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கும் என்றும் அதற்கான அவசியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வரையறைக்கு உட்பட்டு செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் உள்ளக விவாரத்தில் தலையிடவும் இலங்கைக்கு எதிராக செயற்படவும் மனித உரிமை ஆணையாளருக்கு அதிகாரமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Check Also

மரதன் ஓடிய திருக்கோவில் மாணவன் மரணம்: போராட்டத்தை முன்னெடுத்துள்ள பொதுமக்கள்! விபரம்

அம்பாறை மாவட்ட, திருக்கோவில் பகுதியில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய 16 வயதுடைய மாணவரொருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *