Latest News
Home / இலங்கை / தம்பிலுவில் ஆதவன் வீதியில் ஆசிரியை மீது தாக்குதல் – கழுத்தில் இருந்த நகைகள் கொள்ளை

தம்பிலுவில் ஆதவன் வீதியில் ஆசிரியை மீது தாக்குதல் – கழுத்தில் இருந்த நகைகள் கொள்ளை

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் ஆதவன் வீதியில் வீடு ஒன்றில் தனிமையில் இருந்த ஆசிரியர் ஒருவரின் தலையில் தாக்கிவிட்டு அவரின் தங்க நகயை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஆசிரியர் சம்பவதினமான திங்கட்கிழமை மாலையில் வீட்டில் தனிமையில் இருந்துள்ளர்.

இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் வீடு திரும்பிய கணவர் மனைவி திலையில் காயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கீழே வீழ்ந்து கிடப்பதைக்கண்டு அவரை உடனடியாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த ஆசிரியரை தாக்கிவிட்டு அவரின் குழுத்தில் ஈரந்த தங்க நகையை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

மரதன் ஓடிய திருக்கோவில் மாணவன் மரணம்: போராட்டத்தை முன்னெடுத்துள்ள பொதுமக்கள்! விபரம்

அம்பாறை மாவட்ட, திருக்கோவில் பகுதியில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய 16 வயதுடைய மாணவரொருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *