Latest News
Home / இலங்கை / அம்பாறையில் உள்ளூர் துப்பாக்கியுடன் 5 பேர் கைது

அம்பாறையில் உள்ளூர் துப்பாக்கியுடன் 5 பேர் கைது

அம்பாறை- திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத உள்ளூர் துப்பாக்கிகளுடன் 5பேர்,  இன்று (சனிக்கிழமை) அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 5 உள்ளூர் துப்பாக்கிகளை இதன்போது பொலிஸார் மீட்டுள்ளனர்.

திருக்கோவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய, திருக்கோவில் பொலிஸ் நிலை பொறுப்பதிகாரி ஜெயவீர தலைமையிலான பொலிஸார், சம்பவதினமான இன்று அதிகாலை விநாயகபுரம், திருக்கோவில், தம்பிலுவில் காஞ்சாரம்குடா பிரதேசத்தில் உள்ள வீடுகளை சுற்றிவளைத்து சோதனையிட்டனர்

இதன்போது மறைத்துவைக்கப்பட்ட உள்ளூர் தயாரிப்பான 5 சட்டவிரோத துப்பாக்கிகளை மீட்டதுடன் 5 பேரை கைது செய்ததுள்ளர்

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Check Also

மரதன் ஓடிய திருக்கோவில் மாணவன் மரணம்: போராட்டத்தை முன்னெடுத்துள்ள பொதுமக்கள்! விபரம்

அம்பாறை மாவட்ட, திருக்கோவில் பகுதியில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய 16 வயதுடைய மாணவரொருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *