Latest News
Home / இலங்கை / நாடளாவிய ரீதியில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

நாடளாவிய ரீதியில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

நாடளாவிய ரீதியில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு தேசிய செயலணியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுள் 33 ஆயிரம் பேர் பொது சுகாதார பரிசோதகர்களினால் கண்காணிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டதையடுத்து நாடாளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 73 தனிமைப்படுத்தல் நிலையங்களில் சுமார் 7 ஆயிரத்து 128 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *