ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11.09.2020) காலை 06.00 மணி முதல் காலை 08.00 மணி வரை அக்கரைப்பற்று நாகதம்பிரான் ஆலயம் முதல் சின்ன முகத்துவாரம் வரை சிரமதான பணிகள் இடம்பெற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.
வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் சிரமதான பணிகளுக்கு ஏனைய சமூக அமைப்புக்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்துகொண்டு தங்கள் பங்களிப்புக்களை வழங்குமாறும் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் அழைப்புவிடுத்துள்ளார்கள்.
இவ் சிரமதான பணியில் இணைந்து கொள்ளவிரும்புபவர்கள் அக்கரைப்பற்று நாகதம்பிரான் ஆலயத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 06.00 மணிக்கு ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.