Latest News
Home / விளையாட்டு / லங்கன் பிரீமியர் லீக் 2020: தீம் பாடல் மும்மொழிகளில் வெளியானது!

லங்கன் பிரீமியர் லீக் 2020: தீம் பாடல் மும்மொழிகளில் வெளியானது!

சிறிலங்கா கிரிக்கெட் சம்மேளனம் நடத்தும் லங்கன் பிரீமியர் லீக் இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடருக்கான புதிய தீம் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வீரர்களுக்கும் இரசிகர்களுக்கும் உத்வேகத்தை அளிக்கும் வகையில் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

எல்.பி.எல். தீம் பாடல் மற்றும் இசையை இலங்கையின் பிரபல பாடகர்களான பாத்தியா மற்றும் சந்தூஸ் ஆகியோர் சரிகம இசைக் குழுவுடன் இணைந்து தயாரித்து பாடியுள்ளனர்.

இப்பாடலின் தமிழ் வரிகளை கே.கே.பிரகாசுடன் இணைந்து ஏ.டி.கே எழுதியுள்ளதுடன் பாடகர் ஏ.டி.கே, ரோய் ஜக்சன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

இதேவேளை, ஆங்கிலப் பதிப்பில் இளம் பாடகரும் இசையமைப்பாளருமான ஷியாம் டீன் இடம்பெற்றுள்ளதுடன், ரந்தீர் விதானா ஆங்கில பதிப்பிற்கான பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

மேலும், யோகன் அபேகூன் சிங்கள விளக்கக் காட்சியை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் பாடல்: https://youtu.be/qggWL2c5vPk

சிங்களம் பாடல்: https://youtu.be/HJ1_A8XW_mU

ஆங்கில பாடல்: https://youtu.be/aQXDUbbZX8k

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *