நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் சி.ஐ.டி. மூத்த அதிகாரிகளுக்கு இடையிலான தொலைபேசி உரையாடல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக நீதித்துறை மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு ரஞ்சன் ராமநாயக்க அழுத்தம் கொடுத்ததாக இந்த உரையாடல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த தொலைபேசி உரையாடல் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த உரையாடல்கள் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டு சில மணிநேரங்களில் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.