புத்தாண்டை புதிய நம்பிக்கையோடு எதிர்கொள்கிறோம் என இலங்கை இருபதுக்கு இருபது கிரிக்கட் அணியின் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் இருபதுக்கு இருபது போட்டி இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது.
இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே லசித் மாலிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இருபதுக்கு இருபது உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணி நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறினாலே நான் ஓய்வு பெறத் தவற மாட்டேன்.
ஏற்கெனவே டெஸ்ட், ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளேன். விரைவில் இருபதுக்கு இருபது போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புகிறேன். தற்போது போதிய அனுபவம் இல்லாத அணியை வழிநடத்திச் செல்கிறேன்.
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவே எங்கள் இலக்காகும். காயத்தில் இருந்து மீண்டு விளையாடுவது சற்று சிரமம் தான். பும்ராவின் பந்துவீச்சு குறித்த விவரங்களை எங்கள் வீரர்களிடம் தெரிவித்துள்ளேன்.
புத்தாண்டை புதிய நம்பிக்கையோடு எதிர் கொள்கிறோம். இருபதுக்கு இருபது போட்டிகளில் எதையும் கணிக்க முடியாது. பந்துவீச்சாளர்களாலும் வெற்றியை தேடித் தர முடியும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.