Latest News
Home / இலங்கை / பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு தொகை

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு தொகை

பெரும்போக விவசாய நடவடிக்கையில் உர பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் வாரம் முதல் ஒரு ஹெக்டயார் நிலப்பரப்பிலான விவசாய நிலத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் நட்டஈடு வழங்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

ஒரு கிலோ நெல்லுக்கு 25 ரூபாய் வீதம் இழப்பீடு வழங்குவதற்கு பொருத்தமான முறையொன்றை உருவாக்க அமைச்சரவை முன்னதாக அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அதன்படி, உயர்ந்தபட்ச அளவாக 5 ஏக்கர் நிலப்பரப்பை பயிர்ச்செய்கைக்காக வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *