பாராளுமன்ற உறுப்பினர்கள் 4 லட்சம் ரூபாவரை கொடுப்பனவாக பெறுவதாக ஜனாதிபதி தெரிவித்திருப்பதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொது மக்கள் மத்தியில் அகெளரவப்படுத்தப்பட்டுள்ளனர் என ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் எம்.பி. விமலவீர திசாநாயக்க ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து தெரிவிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் 4 லட்சம் ரூபா கொடுப்பனவைப்பெறுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால் எமக்கு இரண்டரை லட்சத்துக்கும் 3 லட்சத்துக்கும் இடைப்பட்ட கொடுப்பனவே கிடைக்கின்றது. அப்படியானால் மிகுதிப்பணத்தை எடுப்பது யார் என்றும் கேள்வி எழுப்பினார்.